100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம்!

Published by
Rebekal

100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் போபாலில் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம்.

மத்திய பிரதேசத்தின் தலைநகரமாகிய போபாலில் உள்ள அயோத்தி என்னும் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பதாக பிறந்து 2 நாட்களே ஆன ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தையின் மார்புப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் ஏகப்பட்ட குத்து காயங்களுடன் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது குறித்து விசாரித்த பொழுது கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலையில் பிறந்த குழந்தை எனவும் அயோத்தி நகரில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளிக்கு முன்னால் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இந்த பெண் குழந்தை கிடந்ததாகவும் தகவல் கிடைத்தது என போலீசார் கூறியுள்ளனர்.

சால்வையால் போர்த்தப்பபட்டிருந்த குழந்தையை போலீஸ் அதிகாரிகள் பரிசோதித்து பார்த்த பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட குத்துக் காயங்கள் இருப்பதை அவர்கள் அறிந்து உடனடியாக குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு நேரத்தில் குழந்தை கோவிலுக்கு அருகில் வீசப்பட்டதால் மிருகத்தால் காயம் அடைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் மேலும் பரிசோதித்து பார்த்தபோது ஒரு சிறிய ஸ்க்ரூட்ரைவர் அல்லது கம்பி போன்ற கடினமான பொருட்களால் பலமுறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிறந்து 2 நாட்களே ஆன இந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை கண்டு போலீசார் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி ஐபிசி பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யதுள்ளனர். தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை இவ்வாறு சித்திரவதை செய்தது யார்? என விசாரணை நடை பெற்று வருகிறது. மேலும் அந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள கட்சிகளின் அடிப்படையில் தற்போது போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

9 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago