குடிவெறியில் தாயின் தலையை துண்டித்த கொடூரன் கைது – காரணம் இது தானாம்!

Published by
Rebekal

குடிக்க பணம் தராததால், குடிவெறியில் தாயின் தலையை துண்டித்த கொடூரன்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கொல்லப்பூர் எனும் கிராமத்தை சேர்ந்த 65 வயதான சந்திரம்மாவின் மகன்தான் ராமுடு. இவருக்கு குருமூர்த்தி என்ற சகோதரரும் உள்ள நிலையில், ராமுடு அதிக அளவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அவருக்கு திருமணம் ஆன பிறகு அவரது மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் அவர் மது அருந்துவதற்காக தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டே வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனது தாயிடம் வழக்கம்போல குடிப்பதற்காக பணம் கேட்ட பொழுது அவரது தாய் தர மறுத்ததால் கடும் கோபமடைந்த ராமுடு வீட்டில் இருந்த அரிவாளால் அவரை வெட்டியுள்ளார். பின் தலையை துண்டித்து தலையை அங்குள்ள புதரில் வீசி விட்டு அவர் தப்பிச் சென்றுள்ளார்.அடுத்த நாள் காலை 7 மணி அளவில் அவரது சகோதரன் குருமூர்த்தி வந்து தாயைப் பார்த்த பொழுது தலை இன்றி தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கொலை செய்தது யார்? தலை எங்கு போனது என குழம்பிப் போயுள்ளார்.

இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் தனது தம்பியை காணவில்லை எனவும் அவர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட சந்திரம்மாவின் தலையை தேடியுள்ளனர். அப்பொழுது அவரது வீட்டின் அருகில் இருந்த புதருக்குள் தலை கிடந்ததை கண்டு போலீசார் அதனை எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவரை கொலை செய்தது அவரது இளைய மகன் ராமுடு தான் என்பதை கண்டறிந்தனர். பின் தலைமறைவாக இருந்த ராமுடுவை போலீசார் கைது செய்துள்ளதுடன் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

1 hour ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

1 hour ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

2 hours ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

3 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

3 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

3 hours ago