#Breaking:கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அதிரடி உத்தரவு..!

Published by
Edison

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன்,ஜூலை மாதத்துக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு,காவிரி நீர் மேலாண்மையின் 12 வது ஆலோசனை கூட்டமானது ,காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்று வருகிறது.

மத்திய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தமிழகம்,கர்நாடகா,புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக,தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக ஜூன்,ஜூலை மாதத்திற்கு கர்நாடக அரசு வழங்கவேண்டிய டிஎம்சி நீர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன்,ஜூலை மாதத்துக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி,ஜூலை மாதத்துக்கான 24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறிய கருத்துக்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், மேகதாது மட்டுமன்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டுவது என்றாலும் எங்கள் அனுமதி தேவை என தெரிவித்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago