#Breaking:கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அதிரடி உத்தரவு..!

Published by
Edison

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன்,ஜூலை மாதத்துக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு,காவிரி நீர் மேலாண்மையின் 12 வது ஆலோசனை கூட்டமானது ,காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்று வருகிறது.

மத்திய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தமிழகம்,கர்நாடகா,புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக,தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப்சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக ஜூன்,ஜூலை மாதத்திற்கு கர்நாடக அரசு வழங்கவேண்டிய டிஎம்சி நீர் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன்,ஜூலை மாதத்துக்கான 33.19 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி,ஜூலை மாதத்துக்கான 24 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறிய கருத்துக்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், மேகதாது மட்டுமன்றி காவிரியின் குறுக்கே எந்த இடத்தில் அணை கட்டுவது என்றாலும் எங்கள் அனுமதி தேவை என தெரிவித்துள்ளனர்.

Published by
Edison

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

2 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

4 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

5 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

5 hours ago