நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வந்தாலும், ஆந்திராவின் நீதித்துறைக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது சில சர்ச்சைகளை கிளப்பியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டசபை சபாநாயகர் தம்பினேனி சீதாராம் மற்றும் துணை முதல்வர் நாராயணசாமி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மற்றும் பலர் உட்பட சமூக வலைதளங்களில் நீதித் துறைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீதான புகார்கள் தொடர்பான விசாரணையை காவல்துறையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சிலர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து சிலர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நீதிபதிகள் ராகேஷ் குமார் மற்றும் உமாதேவி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் நீதித் துறைக்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் பிரமுகர்கள் மீது மாநிலக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…