Manipur riots [Image source : AFP]
மணிப்பூரில் இரு பெண்களை ஆடைகளின்றி ஒரு கும்பல் இழுத்து தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ விசாரணை செய்ய உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரமானது ஊரறிந்த தகவலாக மாறிவிட்டது. இந்த கலவரத்தின் போது இரு பெண்களை ஒரு கொடூர கும்பல் ஆடைகளின்றி இழுத்து சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியான பிறகு மணிப்பூரின் நிலவரம் இந்தியாவையே பதறவைத்தது.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், இது தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுக்க ஆரம்பித்தன.
இந்நிலையில், இரு பெண்கள் பாதிக்கப்பட்ட வீடியோ தொடர்பாகவும், மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மணிப்பூர் கொடூர வீடியோ தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…