தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ தொற்று அதிகரிப்பு -மத்திய அரசு..!

Published by
Edison

தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது குறைந்து வருகிறது. இரண்டாவது அலை பரவலுக்கு டெல்டா வகை வைரஸ் முக்கிய காரணமாக கருத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, கருப்பு பூஞ்சை ,வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை பரவியது.

இந்நிலையில்,தற்போது ‘டெல்டா பிளஸ்’ வகை வைரஸானது தமிழ்நாடு,மகாராஷ்டிரா, மத்திய  பிரதேசம், கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவி வருவதாகவும்,இதுவரை நாடு முழுவதும் 48 பேருக்கு ‘டெல்டா பிளஸ்’ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,மகாராஷ்டிராவில் 20 பேருக்கும்,தமிழகத்தில் 9 பேருக்கும் ‘டெல்டா பிளஸ்’ தொற்று உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து,தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் டாக்டர் சுஜீத் குமார் சிங் கூறுகையில்:”டெல்டா பிளஸ் என்ற பெயரில் உள்ள பிளஸ் அதிக வைரஸைக் குறிக்கவில்லை.மாறாக,பிளஸ் என்பது ஏற்கனவே இருக்கும் மாறுபாட்டின் கூடுதலாகும். இது டெல்டாவை விட வலிமையானது என்று அர்த்தமல்ல.

ஏனெனில்,டெல்டாவை விட கூடுதலாக ஒரே ஒரு K417N மட்டுமே வேறுபட்டது.எனினும்,கூடுதல் ஆய்வுகள் தேவை”,என்று தெரிவித்தார்.

முன்னதாக சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்ததாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

1 minute ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

27 minutes ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

55 minutes ago

டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் : இளம் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்.!

இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…

1 hour ago

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

15 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

15 hours ago