இங்கு முதல்வராக வரவில்லை; தன்னார்வலராக வந்துள்ளேன் – அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு ..!

Published by
murugan

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று சிங்கு எல்லைக்கு (டெல்லி-ஹரியானா எல்லை) சென்று அங்கு முகாமிட்டுள்ள விவசாயிகளுக்காக மாநில அரசு செய்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவருடன் மற்ற அமைச்சர்களும் சென்றனர்.

ஆய்வு  முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். விவசாயிகளின் பிரச்சினை மற்றும் போராட்டம் முற்றிலும் நியாயமானது. ஆரம்பத்தில், விவசாயிகள் எல்லைக்கு வந்தபோது, ​​மத்திய அரசு, டெல்லி காவல்துறை டெல்லியின் 9 ஸ்டேடியத்தை சிறையாக மற்ற அனுமதி கேட்டது, இதனால் எனக்கு பல அழைப்புகள் வந்தன, நிறைய அழுத்தங்களும் வந்தன. நான் என் மனசாட்சியைக் கேட்டேன். அந்த முடிவால் விவசாயிகள் இயக்கம் பாதிக்கப்படும் என்று நினைத்து அனுமதிக்கவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள் இயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறோம் என்றும், அரசாங்கம் அவர்களுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், நான் இன்று முதல்வராக இங்கு வரவில்லை, இங்கு தன்னார்வலராக வந்துள்ளேன். இங்குள்ள ஏற்பாட்டையும் பார்த்திருக்கிறேன். சில நீர் பிரச்சினை உள்ளது, அது விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.

பாரத் பந்த்தை நாங்கள் அதை ஆதரிக்கிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். 12 நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து விவசாயிகள் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் அமைதியான போராட்டங்களை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

4 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

5 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

6 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

6 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago