Categories: இந்தியா

ஜாபர் சாதிக் ஜாமீன் ஓகே.! வெளியில் வர முடியாத புதிய சிக்கல்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருள்கள் கடத்தியாக சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர். கடத்தப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் என்று அப்போது கூறப்பட்டது. ஜாபர் சாதிக் தமிழகத்தில் பிரதான கட்சியில் முன்னாள் பிரமுகராகவும் இருந்துள்ளார். பின்னர் ஜாபர் சாதிக் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 28இல் அமலாக்கத்துறையும் கைது செய்திருந்தது. இதற்கிடையில், டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுதிர் குமார் சிரோஹி ஜாபர் சாதிக்கிற்கு போதை பொருள் கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்…

  • 1 லட்சம் ரூபாய் பிணை தொகை செலுத்த வேண்டும்.
  • மாதத்தின் முதல் திங்கள் அன்று மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
  • ஜாபர் சாதி தனது பாஸ்போர்ட்டை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். எந்த நேரமும் தொடர்பு கொள்ள எதுவாக செல்போன் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
  • வீடு முகவரி மாறினால் அதனை விசாரணை அதிகாரிகளிடம் கூற வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இருந்தாலும், ஜாபர் சாதிக் தற்போது சிறையில் இருந்து வெளியில் வரமுடியாத சூழல் உள்ளது. ஏன்னென்றால், அமலாக்கத்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திகார் சிறையில் அவர் விசாரணையில் இருப்பதால் ஜாமீனில் வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. அமலாக்கத்துறை கைதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

15 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

10 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

13 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

14 hours ago