Delhi Air Polution [File Image]
தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
டெல்லி அருகே உள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிரிடப்பட்ட பின்னர், மீதம் இருக்கும் விவசாய கழிவுகளை தீயிட்டு அழிப்பதன் காரணமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறி, விவசாய கழிவுகளை தீயிட்டு அழிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
டெல்லியில் மற்ற மாநில டாக்சிகள் நுழைவதற்கு தடை..!
அதே போல, காற்று மாசு அதிகம் இருக்கும் பகுதிகளில் தண்ணீர் லாரி கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து அதன் மூலமும் காற்று மாசுவை குறைக்க டெல்லி மாநில அரசு முயற்சித்து வருகிறது. தற்போது அடுத்த கட்டமாக செயற்கை மழையை வரவைக்க மாநில அரசு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
இதற்கான தகவலை, நேற்று டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கோபாலராய் வெளியிட்டார். அதன்படி, ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன், டெல்லியில் செயற்கை மழையை உருவாக்கி மழைபொழிவை வரவைத்து அதன் மூலம் காற்று மாசுவை கட்டுப்படுத்த உள்ளது.
செயற்கை மழை என்பது மேகங்களில் மழைத்துளிகள் உருவாவதை அதிகரிப்பதன் மூலம் மழைப்பொழிவைத் தூண்டும் செயலாகும். இது ஒரு வானிலையை மாற்றும் தொழில்நுட்பமாகும். சில்வர் அயோடைடு அல்லது பொட்டாசியம் அயோடைடு போன்ற வேதிப்பொருட்களை மேகங்களுக்குள் செலுத்துவதன் மூலம் இது மேக மூட்டம் அதிகரிப்பு அல்லது பனிக்கரு உருவாக தூண்டுதலாக செயல்படும். இது மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் அதிகரிக் செய்கிறது. இதன் மூலம் நீர்த்துளிகள் அதிகமாக உருவாகி மழை பெய்ய வழிவகுக்கிறது.
இந்த செயற்கை மழையை உருவாக்க 40 சதவீத மேகமூட்டம் இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால், வரும் நவம்பர் 20,21 ஆகிய தேதிகளில் டெல்லில் மேகக்கூட்டம் உருவாக உள்ளது. அன்றைய தினம் செயற்கை மழை பொழிய ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக இன்று டெல்லி மாநில அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோர உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இதற்கான வேலைகளை அரசு மேற்கொள்ளும்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…