பாபா ராம்தேவுக்கு தடை விதிக்க முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் ..!

Published by
Edison

அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.

பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு,பாபா ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.

அதில் தனது கருத்தை திரும்பப் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை “நவீன மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து,இந்திய மருத்துவர் சங்கம்,பாபா ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார்.அதனால் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது,

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,அலோபதி குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும்,இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில்,”அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்து,சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியது.எனவே,அவர் தனது சொந்த கருத்தை தெரிவித்ததற்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?.

மேலும்,வழக்கு தொடர்ந்த நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்க வேண்டியதுதானே?”,என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து,பாபா ராம்தேவ் தனது கொரோனில் மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தி வருவதால் அதற்கு விளக்கம் கேட்டும்,வழக்கை ஜூலை 13 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது.இருப்பினும்,அதுவரை எந்தவிதமான சர்ச்சை அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று பாபா ராம்தேவிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Published by
Edison

Recent Posts

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

18 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago