உருமாறிய டெல்டா வகை வைரஸ் ஐரோப்பிய பகுதிகளில் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ், தற்பொழுது ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் இந்த உருமாறிய வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 28 ஐரோப்பிய நாடுகளில் 19 நாடுகளில் இந்த டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த டெல்டா வகை கொரோனா வைரஸால் ஆல்பா வகை வைரஸை விட அதிகம் பரபி உள்ளதாகவும், ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இந்த டெல்டா வகை வைரஸ் பரவல் இருப்பதாகவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுபோல தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் அடுத்த சில வாரங்களில் இந்த டெல்டா வகை வைரஸின் ஆதிக்கம் உலகம் முழுவதிலும் வெளிப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…