மகனை நீட் தேர்வு எழுத அனுப்பிவிட்டு தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்…!

Published by
லீனா

ஹைதராபாத்தில், மகனை நீட் தேர்வு எழுத அனுப்பிவிட்டு தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்.

ஹைதராபாத், மேடக் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை மருத்துவர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள், நேற்று அதிகாலை 6 மணியளவில் தனது மனைவி அனுராதா மற்றும் மகன் சோஹன் சாய் வெங்கட் ஆகியோருடன், மகன் நீட் தேர்வு எழுதும் மையத்திற்கு சென்று, அங்கு வெங்கட்டாய் மையத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மேடக் நகருக்கு சென்றார்.

மருத்துவரான அனுராதா தம்பதியினரால் நிர்வகிக்கப்படும், அனுராதா மருத்துவமனையில் அவசர வழக்கு இருந்ததால் அவசர அவசரமாக மகனை இறக்கி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் சந்திரசேகர் KPHB கிராண்ட் ஹோட்டலில் ஒரு அறையை பதிவு செய்தார். அவருக்கு அறை எண் 314 கொடுக்கப்பட்டது. அதற்குள் நுழைந்த மருத்துவர் சந்திரசேகர் கன நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனையடுத்து, சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அறையின் கதவை தட்டி உள்ளனர். ஆனால் அவர் வெளியே வராத நிலையில், அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து கொண்டனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதாரங்களின்படி மருத்துவர் மேடக்கில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் தர்மகாரி ஸ்ரீனிவாஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரோடு தொடர்புடையவர். கடந்த மாதம் ஒரு காரின் உட்பகுதி அவரது உடல் கருகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போதிலிருந்து மருத்துவர் மனம் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது தற்கொலைக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற சரியான தகவல் இன்னும் தெரியவரவில்லை.

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

10 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

10 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

13 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

13 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

14 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

15 hours ago