ராஜஸ்தானில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மொபைல் டார்ச்சை வைத்து சிகிச்சையளித்த மருத்துவர். ஒருவர் உயிரிழப்பு.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருந்தனர். அவர் ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது.
இதனையடுத்து மருத்துவர்கள் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. அப்பெண் உயிரிழந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் உயிரிழந்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக பல நோயாளிகளின் நிலை மோசமடைந்து பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…