Categories: இந்தியா

அதிர்ச்சி!! ஐஸ்கிரீமில் கிடந்த விரல்.. டிஎன்ஏ ரிப்போர்ட்டில் வெளியே வந்த உண்மை!

Published by
கெளதம்

மகாராஷ்டிரா : புனே மாவட்ட மலாட் பகுதியில் ஐஸ்கிரீமில் மனித விரல் துண்டு கிடப்பதை கண்டெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது Yummo என்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு சொந்தமானது என்பது காவல்துறையினரால் பெறப்பட்ட டிஎன்ஏ அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் 12ஆம் தேதி ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் துண்டு இருப்பதை மலாட் பகுதியை சேர்ந்த MBBS மருத்துவர் பிராண்டன் செர்ராவ் கண்டுபிடித்தபோது இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, மருத்துவரின் புகாரைத் தொடர்ந்து, Yummo ஐஸ்கிரீம் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து மலாட் காவல் நிலையத்தைச் சேர்ந்த குழு இந்தாபூரில் உள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலைக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டதில், அங்கிருக்கும் ஊழியர் ஒருவருக்கு விரல் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆம், புனேவைச் சேர்ந்த 24 வயதான ஓம்கார் போட் என அடையாளம் காணப்பட்ட ஊழியர், மே 11 அன்று புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரில் உள்ள ஃபார்ச்சூன் பால் தொழிற்சாலையில், ஐஸ்கிரீம் கோன்களை நிரப்பும் போது தனது விரல் நுனியை இழந்தார் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், அவரது டிஎன்ஏ மற்றும் ரத்த மாதிரிகளைச் சேகரித்து, ஐஸ்கிரீம் கோனில் கண்டெடுக்கப்பட்ட மனித விரலையும், ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து அந்த விரல் அவனுடையதுதானா என்பதை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஐஸ்கிரீமில் இருந்த விரலும், ஊழியரின் டிஎன்ஏவும் ஒத்துப்போனது. இந்நிலையில், ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட விரல் துண்டு ஊழியருடையது என்பது உறுதியானது.

Published by
கெளதம்

Recent Posts

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

7 minutes ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

55 minutes ago

ஹைதராபாத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு.!

ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…

1 hour ago

விராட் கோலிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் – ரெய்னா.!

டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…

2 hours ago

“தவறை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்” – தோல்வி குறித்த இஸ்ரோ தலைவர் கூறியது என்ன?

ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…

2 hours ago

இந்தியாவின் 101வது ‘PSLV C-61’ ராக்கெட் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு.!

ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…

3 hours ago