தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் 4 வயது மகளை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கசியபாத்தில் 28 வயதான வாசுதேவ் தனது மனைவி குப்தா, 4 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வாசுதேவுக்கும் அவரது மனைவி குப்தாவுக்கும் இடையில் அண்மையில் சண்டை வந்துள்ளது. வாக்குவாதம் வலுக்கவே குப்தா தனது 3 வயது மகனை தன்னுடன் அழைத்துக்கொண்டு எங்கேயோ சென்றுவிட்டார். எனவே அவர்களின் 4 வயது மகள் வாசுதேவுடன் இருந்துள்ளது.
மனைவியை காணவில்லை என வாசுதேவ் மன அழுத்தத்தில் இருந்த நிலையில், அவர்களின் மகளும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அழுகையை நிறுத்தாததால் கோவத்தில் கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்துள்ளார். அதன் பின் குழந்தையின் சடலத்துடன் மனைவியை தேட துவங்கியுள்ளார். இந்நிலையில் குப்தாவின் சகோதரன் அவர்களின் வீட்டிற்கு சென்று பார்த்து யாரும் இல்லாததால் வாசுதேவுக்கு போன் செய்துள்ளார்.
அப்பொழுது அவர் குழந்தையை கொலை செய்துவிட்டு குப்தாவை தேடுவதாக கூறியதை அடுத்து அதிர்ச்சியடைந்த குப்தாவின் சகோதரர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசார் வாசுதேவை உடனடியாக கைது செய்து அவரை விசாரித்ததில், ஏற்கனவே மனைவியை காணவில்லை என மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தொடர்ச்சியாக குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அவரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…