மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது..!

Published by
murugan

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 

5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்த முதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும்,  அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தீவிரமாக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளதால் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. காலில் அடிப்பட்ட போதும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டம் – மார்ச் 27,  2-ம் கட்டம் -ஏப்ரல் 1 , 3-ம் கட்டம்- ஏப்ரல் 6,  4-ம் கட்டம்-ஏப்ரல் 10, 5-ம் கட்டம்-ஏப்ரல் 17, 6-ம் கட்டம்-ஏப்ரல் 22, 7-ம் கட்டம்- ஏப்ரல் 26,  8-ம் கட்டம்-ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கும், 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், 3-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மட்டும் மே 2-ஆம் தேதி ஒரே நாளில் ஐந்து மாநிலங்களுக்கும் நடைபெற உள்ளது.

 

 

 

Published by
murugan

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

2 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

3 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago