Categories: இந்தியா

மோடி 3.O.! 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் இன்று முதல் தொடக்கம்…

Published by
மணிகண்டன்

டெல்லி: கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியை  கைப்பற்றி நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடி 3.O நிகழ்வுக்கு பிறகு இன்று, 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இன்றும் நாளையும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். நாளை தமிழக எம்பிக்கள் பதவி ஏற்க உள்ளனர். இன்று பதவி ஏற்கும் பிரதமர் மோடி மற்ற அமைச்சர்கள் உட்பட 280 உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகராக குடியரசு தலைவரால் அறிவிக்கப்பட்ட  பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தப் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

அதனை அடுத்து , நாளை மீதமுள்ள 263 உறுப்பினர்களும் பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளனர்.  இதனை அடுத்து வரும் 26ஆம் தேதி புதிய மக்களவை சபாநாயகரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் மக்களவை சபாநாயகர் பொறுப்பை பாஜக தன்வசம் வைத்துக்கொள்கிறதா அல்லது NDA கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறதா என்பது தெரியவரும்.

மக்களவை சபாநாயகர் தேர்தல் முடிந்து அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படும். அதனை அடுத்து, வரும் ஜூன் 27ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மக்களவையில் உரையாற்றி 18வது மக்களவை கூட்டத்தொடர் நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

28 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago