5 பென்ஸ் கார்களுடன் சென்ற லாரியை மறித்து கடத்திய கும்பலை விரட்டி பிடித்த காவல்துறையினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் ஹரியானா மாநிலத்தில் ஐந்து புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை கண்டெய்னர் லாரி ஒன்று ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த லாரியை கொள்ளை கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் மறித்து லாரி ஓட்டுநரை கயிறால் கட்டிப் போட்டு விட்டு, உள்ளே இருந்த கார்களுடன் கண்டெய்னர் லாரியை கடத்திச் சென்றுள்ளது. இந்நிலையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சாலையில் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக அங்கிருந்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து தனிப்படை அமைத்து லாரியை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது நுஜ் மாவட்டத்திலுள்ள நாய் நகர் எனுமிடத்தில் வசிக்கக்கூடிய ரஸாக் என்பவர்தான் கும்பலின் தலைவன் என்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டு உள்ளது. அதனை அடுத்து விரட்டிப் பிடித்து கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற கும்பலை லாரியுடன் பிடித்த போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். லாரியில் இருந்த ஐந்து கார்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் கடத்தல் தொடர்பாக கொள்ளை கும்பலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…