குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி செய்து வந்தவர் அர்பிதா சவுத்ரி.இவர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வந்து உள்ளார்.
இந்த டிக் டாக்கில் மற்றவர்களை போல தாமும் வீடியோ செய்து வெளியிட வேண்டும் என எண்ணி உள்ளார்.இதை தொடர்ந்து பெண் காவலர் அர்பிதா சவுத்ரி காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் சீருடை இல்லாமல் இந்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.
அர்பிதா சவுத்ரி குத்தாட்டம் போட்ட வீடியோவை டிக் டாக் செயலியில் பதிவு செய்து உள்ளார்.இந்த வீடீயோவை பார்த்த பலர் காவல் நிலையத்தில் ஒரு காவலர் பொறுப்பு இல்லாமல் இப்படியா ஆட்டம் போடுவது? என கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் பெண் காவலர் அர்பிதா சவுத்ரி இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவு விட்டார்.இது குறித்து துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா கூறுகையில் , பணி நேரத்தில் சீருடை இல்லாமல் இருந்து உள்ளார்.மேலும் காவல் நிலையத்தில் வீடியோ எடுத்து உள்ளார்.
அது மட்டுமல்லாமல் காவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை மீறி உள்ளார்.அதனால் பெண் காவலர் அர்பிதாவை இடைநீக்கம் செய்து உள்ளதாக கூறினார்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…