இன்று சீதாராமன் தலைமையில் கூடும் ஜிஎஸ்டி கவுன்சில்..தமிழகத்திற்கு 12,250 கோடி50லட்சத்தை விடுவிக்குமா?

மாநிலங்களுக்கான இழப்பீட்டு தொகை குறித்து முடிவு செய்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது.
ஜிஎஸ்டி வரி முறை ஏற்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்புகளை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது வரி வசூலில் மாநிலங்களுக்கான தொகையை மத்திய அரசு முழுமையாக செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபார் இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் கோரிய போது 97 ஆயிரம் கோடி
ரூபாய் வரை வங்கிகள் இருந்து மாநில அரசுகள் கடன் வாங்கி கொள்ளலாம் என்று ஆலோசனையை நிர்மலா சீதாராமன் தெரிவித்த நிலையில் பாஜக ஆளும்
மாநிலங்களில் மேற்கு வங்கம் பஞ்சாப் கேரளா மகாராஷ்டிரா உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கக் இதனை ஏற்கவில்லை.இந்நிலையில் தான் தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 250 கோடியே 50லட்ச ரூபாயை உடனடியாக விடுக்க முதல்வர் பழனிச்சாமி ஏற்கனவேபிரமருக்கு
கடிதம் எழுதியனார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு இருக்க இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில் நிலுவைத் தொகை குறித்து தமிழகம் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025