காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானை சார்ந்த மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்தனர்.
அவர்கள் தாக்குதல் நடத்திய அடுத்த 12 நாள்களில் அதாவது பிப்ரவரி 26-ம் இந்திய போர் விமானம் பாலக்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் இறந்தனர்.
இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் உடனடியாக வான்வெளியை மூடியது.பின்னர் பாகிஸ்தான் தெற்கு பகுதிக்கான 2 தடங்களை மட்டுமே திறந்து விட்டது.அதை தொடந்து இந்திய வான்வெளியில் தாற்காலிகமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதாக இந்திய விமானப்படை மே 31-ம் தேதி அறிவித்தது.
ஆனாலும் பாகிஸ்தான் வான்வெளியை திறக்கத்தால் இந்திய விமானங்கள் சுற்றி பறக்க நேரிட்டது.இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையே பதட்டம் குறைந்து உள்ளதால் இந்திய விமானங்கள் பறக்க 4 1/2 மாதத்திற்கு பிறகு பாகிஸ்தான் தன் வான்வெளியை நேற்று முன்தினம் அதிகாலை திறந்தது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…