உ.பி.: பல் மருத்துவருக்கு கத்தி குத்து – 21 வயது இளைஞன் கைது!

Published by
Hema

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவரை கத்தியால் குத்திய நபர் கைது…சிறிது நேரம் காத்திருக்க கூறியதால் இளைஞன் சீற்றம்!

உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவர் 21 வயதுள்ள ஒரு இளைஞனால் கத்தி கொண்டு தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பேரில் உ.பி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில்  ஜார்ச்சா கிராமத்தில் வசிக்கும் முகமது குமாயிலிற்கு (21) பல்வலி ஏற்பட்டதை அடுத்து பல் மருத்துவர் அஜய் கோஷ் சர்மாவை (45) தாத்ரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பார்வையிட்டுள்ளார்.

மேலும் குமாயில் மருத்துவமனைக்கு சென்ற நேரம் காத்திருக்கும் நேரமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவர் அவரை சற்று நேரம் காத்திருக்குமாறு கூறியிருந்தார், இருப்பினும் சிறிது நேரம் கழித்து குமாயில் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வாக்குவாதம் முற்றி குமாயில் மருத்துவரை கத்தியால் தாக்கியுள்ளார், இதனையடுத்து மருத்துவர் சர்மா அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.

இது குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விஷால் பாண்டே கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் உடனடியாக குமாயிலை கைது செய்ததாகவும், அவர் மீது ஐபிசி பிரிவு 308 இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் கத்தி மழுங்கிய நிலையில் இருந்ததால் சர்மாவுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
Hema

Recent Posts

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 minutes ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

48 minutes ago

உங்களுடைய வெற்றியை பார்த்து தந்தை போல் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…

2 hours ago

சலுகைகள் இல்லைனா தென்னாப்பிரிக்காவுக்கே போயிருப்பார்…மஸ்கை கிண்டல் செய்த ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும்…

2 hours ago

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக…

3 hours ago

காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 hours ago