இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் இருக்கும் ரயில் தண்டபாலத்தில் கடந்த 21-ம் தேதி தீப்தி ரமேஷ் என்பவரின் சடலம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அந்த பெண்ணின் சடலத்தின் அருகில் ஒரு கடிதமும் கைபேசியும் இருசக்கர வாகனமும் இருந்துள்ளது.
அந்த கடிதத்தில் அந்த பெண் அவரது கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக எழுதியுள்ளார்.இந்த தகவல் கைபேசி வழியாக அந்த பெண்ணின் தந்தைக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரின் கணவரை கைது செய்துள்ளனர்.மேலும் பிரேத பரிசோதனையில் தலையில் காயம் ஏற்பட்டதால் தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் பெண்ணின் சடலம் கிடந்த இடத்தை தொடர்ந்து உள்ள சி சி டிவி கேமராவை சோதனை செய்து பார்த்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் தீப்தியும் சச்சினும் ஒரே இருசக்கரவாகனத்தில் வந்ததாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் சச்சினை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொலை நடந்ததாக கூறியுள்ளார்.
மேலும் இந்த கொலையை தீப்தியின் கணவரின் பேரில் சுமத்த அவரின் கைபேசியில் இருந்து தீப்தியின் தந்தைக்கு அவ்வாறு மெசேஜ் அனுப்பியதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…