Categories: இந்தியா

இதற்கு மேகதாது அணை திட்டமே நிரந்தர தீர்வு – கர்நாடகா முதலமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு – கர்நாடகா இடையே கடந்த சில மாதங்களாக காவிரி பிரச்சனை தீவிரமாக இருந்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய போதிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது என்றும் கூடுதல் நீரை திறந்துவிட கோரியும் சட்ட போராட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், உரிய நீரை காவிரியில் இருந்து திறக்கவில்லை.

போதிய நீர் இல்லாததால் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. இதுதொடர்பாக இரு மாநிங்களில் பல்வேறு போராட்டங்கள் , இதுதொடர்பான வழக்குக்குகள் முன்னெடுக்கப்பட்டது. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் மேகதாது திட்டம் வந்ததால் மட்டுமே முடியும் எனவும் கூறி வருகின்றனர். ஆனால், மேகதாது திட்டத்திற்கு தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விடுதலை.!

அத்திட்டம் வந்தால், தமிழகத்துக்கு கிடைக்கும் நீர் சுத்தமாக கிடைக்காது என கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த அக். 13ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் தண்ணீரை அக்.16 முதல் அக்டோபர் 31 வரை திறக்க வேண்டும் என  கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை திறந்து விடவில்லை.  காவிரி ஒழுங்காற்று குழுவின் 89வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அப்போது, நவம்பர் 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. அதுமட்டுமில்லாமல், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசின் ஒப்புதல் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மேகதாது திட்டமே நிரந்தர தீர்வு என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், காவிரி படுகையின் அவல நிலையை போக்க நிரந்தர தீர்வு மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது தான் என்றுள்ளார்.

இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டும் திட்ட அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் அளிக்கும்படி, மாநில அரசு சார்பில், மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும், இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேகதாது விஷயத்தில் கர்நாடகா மீது  மத்திய அரசு விரோத போக்கை காட்டுகிறது என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறுகையில், மேகதாது அணை கட்டுவதற்கு அண்டை மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதம் நடத்த முடியவில்லை. இது மத்திய அரசின் தவறு அல்ல  தெரிவித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

37 minutes ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

1 hour ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

2 hours ago

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

3 hours ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

4 hours ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

4 hours ago