பாட்னாவில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முகேஷ் ஹிசாரியா (49) இந்த தொற்றுநோய் காலத்தில் ஏழை மக்களுக்கு உதவும் ஒரு மனிதராக வலம் வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்த்தொற்று காலத்திலும் மனிதாபிமானமிக்க உதவும் மனம் கொண்ட பலர் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாட்னாவில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முகேஷ் ஹிசாரியா (49) இந்த தொற்றுநோய் காலத்தில் ஏழை மக்களுக்கு உதவும் ஒரு மனிதராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு வரை 130 கொரோனா வைரஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடக்கம் செய்துள்ளார். கொடிய வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்கள் கூட இறுதி சடங்கிற்கு வராத சந்தர்ப்பங்களில், இதுபோன்ற 35 நோயாளிகளை இவர் தகனம் செய்துள்ளார்.
தினசரி கிட்டத்தட்ட இருபது தொலைபேசி அழைப்புகள் இவருக்கு வந்துவிடும். இவர் இறந்து போனவர்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளில் செய்துவருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த உடல்களை தகனம் செய்வதற்கு யாரும் உதவாத நிலையில், இறுதி சடங்குகள் சரியான முறையில் செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் 135 சடலங்களை தகனம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்ட, உதவி இல்லாதவர்களுக்கு இலவச உணவு ஏற்பாடு செய்யவும் தொடங்கியுள்ளார். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒரு ரத்த வங்கியை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். தொற்றுநோயால் மனிதகுலம் ஆபத்தில் இருக்கும்போது அனைவரும் அதை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…