வறுமைக்கு விடை கொடுக்க வழி தெரியாமல், மகளுக்கு முடிவுரை எழுதிய தாய்!

Published by
Rebekal

வறுமையை போக்க வழியின்றி 6 வயது குழந்தையை கொன்ற தாய்.

உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உஷாதேவி எனும் பெண் கொரோனா காலகட்டத்தில் மிகக் கொடுமையான வறுமையில் சிக்கியுள்ளார். தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் உஷா தேவி வருமானத்தில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் என ஐந்து பேருக்கு உழைத்து சாப்பாடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் வருமானம் போதாததால் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார்.
இந்நிலையில் ஆண் குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் பெண் குழந்தை இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என நினைத்து கலங்கிய உஷாதேவி தனது மனதை கல்லாக்கிக் கொண்டு அவரது மகளை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய அந்த பெண் வறுமையால் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்ததாகவும் என்ன செய்வதென்று தெரியாமல் தான் தன் மகளை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

12 minutes ago

என்ன நடந்தாலும் கூலா இருப்பாரு.., விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்த மமிதா பைஜு.!

சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…

39 minutes ago

டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம் : இளம் வீரர்களுக்கு டிப்ஸ் கொடுத்த சச்சின்.!

இங்கிலாந்து : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.…

53 minutes ago

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

14 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

14 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

16 hours ago