[Image search : Shutterstock)]
12ஆம் வகுப்பு படித்து சைபர் குற்றங்களின் மூளையாக செயல்பட்ட தாடி எனும் நபரை முமபை போலீசார் கைது செய்துள்ளனர்.
பல நாட்களாக தேடப்பட்டு வந்த சைபர் கிரைம் குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்ரீனிவாஸ் ராவ் தாடி எனும் 49 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சைபர் கிரைம் குற்றவாளி வங்கி கணக்கில் இருந்து தினமும் 5 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீனிவாஸ் ராவ் தாடி படித்தது 12ஆம் வகுப்பு மட்டுமே. ஆனால், சைபர் குற்றங்களுக்கு என்னென்ன தேவையோ அதனை மட்டும்கற்று தேர்ந்துள்ளார். அதன் பிறகு ஒரு குழு அமைத்து, பெரும்பாலும் பெண்களை போலீஸ் அதிகாரி போல பேச வைத்து, ஒரு நபரை குறிவைத்து, அவருக்கு பார்சல் வந்துள்ளது என கூறி, அதில் துப்பாக்கி, ஆயுதங்கள் வந்துள்ளதாக பொய்யாக கூறி, பின்னர் அதில் இருந்து தப்பிக்க வழிகள் கூறி அதன் மூலம் தாடியின் கும்பல் பணம் பறித்து வந்துள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீனிவாஸ் ராவ் தாடியை வெகு நாட்களாக பாலோ செய்து, நேற்று, ஹைதராபாத்தில் உள்ள ஒரு விலையுயர்ந்த தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த தாடியை பங்கூர் நகர் காவல் நிலையக் குழு மூலம் மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…