புரேவியை தொடர்ந்து நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Published by
Rebekal

புரேவி புயலைத் தொடர்ந்து நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயல் இலங்கையில் இரவு கரையை கடந்த நிலையில், பாம்பனில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், தற்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்றவர்களுக்கு திரும்பவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் புயலை மேற்கொள்வதற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தென்தமிழகத்தில் தயாராக உள்ளனர். நிவர் புயல் பாதிப்பே இன்னும் முழுமையாக சரி கட்டப்படாமல் இருக்கிறது. இருப்பினும் அடுத்ததாக புரேவி புயலை எதிர்கொள்ள தயாராக இருந்தாலும், தற்போது தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

19 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago