மத்திய பிரதேசத்தில் ஒருவர் தனது சொத்தில் ஒரு பாதியை தனது நாய் ஜாக்கிக்கு எழுதி வைத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஓம் நாராயண் வர்மா என்ற விவசாயிகு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தங்கள் குடும்ப சண்டைக்குப் பிறகு ஒரு முடிவை எடுத்துள்ளார். அதில், அவரது மரணத்திற்குப் பிறகு தனது மனைவி சம்பா பாய் மற்றும் நாய் ஜாக்கி ஆகியோருக்கு தனது சொத்தின் சட்டப்பூர்வ வாரிசாக மாற்றியுள்ளார்.
அவர் தனது சொத்தில் எதையும் தனது குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை எனவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது விருப்பத்தின்படி, அவர் தனது 18 ஏக்கர் நிலத்தில் பாதியை தனது செல்ல நாய்க்கும், மீதி பாதியை தனது மனைவிக்கும் கொடுத்துள்ளார்.
இது குறித்து ஓம் நாராயண் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் என் குழந்தைகளை நம்பவில்லை” என்று கூறினார். எனவே எனது மரணத்திற்குப் பிறகு எனது சொத்தின் பாதி எனது செல்ல நாய் ஜாக்கிக்கும், பாதி என் மனைவி சம்பாவுக்கும் சொந்தமாகும். எனது நாயை யார் கவனித்துக்கொள்கிறார்களோ அவர்கள் அந்த நாயின் பங்கில் எழுதப்பட்ட சொத்தின் உரிமையாளராக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…