Drunken man [file image]
ஐதராபாத்: கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள ஹனுமகொண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நீர் நிலையில் ஒரு ஆணின் உடல் 5 மணி நேரமாக மிதப்பதை கண்ட அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு சென்ற இரண்டு கான்ஸ்டபிள்கள், ஆடாமல் அசையாமல் நீர்நிலையில் மிதந்த அந்த நபரை கண்டதும். அங்கிருந்த ஒரு போலீசார் நீர்நிலையில் மிதந்த அந்த நபரின் கையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது சட்டென தண்ணீரில் மிதந்த அந்த நபர் தலையை திருப்பி பார்த்துள்ளார். இதனால் அதிரிச்சியில் ஆழ்ந்த போலீசார் அவரை கறைக்கு அளித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பின்னர், அவரை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி உள்ளனர். அதில், அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் தான் அருகில் உள்ள கிரானைட் குவாரிகளில் தான் வேலை செய்து வருவதாகவும், வெயிலின் வெப்பத்தை தணிக்கவே நீர்நிலையில் இப்படி தஞ்சம் அடைந்ததாகவும் கூறி இருக்கிறார். இது சம்மந்தமான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…