Categories: இந்தியா

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் அரசு வழங்கிய உயரிய விருது.!

Published by
Muthu Kumar

இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு, சுரினாமின் உயரிய குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் அரசுமுறை பயணமாக சுரினாமுக்கு சென்றிருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்(Grand Order of the Chain of the Yellow Star) விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. தென்னமெரிக்க நாடான சுரினாம் அரசு வழங்கும் இந்த உயரிய கவுரவம் நம் இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த நட்பை அடையாளப்படுத்தும் விதமாக இருப்பதாக திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

விருது வாங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி, ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது வாங்கியபின் ஜனாதிபதி முர்மு, சுரினாமின் மிக உயர்ந்த சிறப்பைப் பெறுவதற்கு மிகவும் பெருமைப்படுவதாக கூறினார், மேலும் இந்த விருது அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, நம் இந்திய மக்கள் அனைவருக்கும் சிறப்பு வாய்ந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதர உறவுகளை மேம்படுத்துவதில், அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இந்த கௌரவத்தை நான் அர்ப்பணிக்கிறேன் என ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.<


/p>

Published by
Muthu Kumar

Recent Posts

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

28 minutes ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

54 minutes ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

2 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

2 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago