மக்களே…கொரோனா தடுப்பூசி கட்டாயம்;செலுத்தாமல் பொதுஇடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – அரசு அதிரடி உத்தரவு!

Published by
Edison

புதுச்சேரி:கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும்,இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பரவிய நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதன்படி,தளர்வுகளற்ற ஊரடங்கு,தொடர்ந்து தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

மேலும்,குறிப்பாக,நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுள்ளது.எனினும்,மக்கள் சிலர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர்.இதற்கிடையில்,பல பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம்,கொரோனா வைரஸ் தற்போது உருமாறி ஓமைக்ரான் எனும் வைரஸாக ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.அதன்படி, இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் பாதிப்பு ஏற்கனவே பெங்களூரில் இரண்டு பேருக்கும,குஜராத்தில் ஒருவருக்கும்,மகாராஷ்டிராவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும்,இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

“புதுச்சேரி பொது சுகாதாரச் சட்டம்,1973 இன் பிரிவு 8 மற்றும் பிரிவு 54(1)ன் படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி,புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் ஆக்கப்படுகிறது. இதனால்,தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.எனினும், இதை மீறி பொது இடங்களுக்கு வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”, என தெரிவித்துள்ளார்.

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

6 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

7 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

8 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

9 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago