இறைச்சிக்காக கர்ப்பமாக இருந்த காட்டெருமையை வேட்டையாடியவர் கைது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிச்சிக்கழிபகுதியில், அரசு அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சிலர் காட்டு விலங்கு ஒன்றை வேட்டையாடி அதன் இறைச்சியை சாப்பிடுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் அன்றிரவே குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி அவர்களை பிடித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் சோதனையில் இறங்கியபோது அன்றிரவே சுமார் 25 கிலோ மதிப்பிலான இறைச்சியை மீட்டு இருந்தோம். ஆனால் அப்போது அங்கிருந்து குற்றவாளிகள் தப்பி விட்டனர். இருப்பினும் அவர்கள் வேட்டையாடிய காட்டு விலங்கின் இறைச்சியை மட்டும் மீட்டுவிட்டோம்.
முதலில் அந்த இறைச்சி மான் இறைச்சி என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஞாயிறு அன்று இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சுரேஷ் பாபு என்பவரை கைது செய்த பிறகுதான் இது காட்டெருமையின் இறைச்சி என கண்டறிந்தோம்.
பின் அந்த எருமையின் எலும்புகளை சேகரித்து ஆய்வு செய்ததில், அந்த எருமை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…