கர்நாடகாவில் நாளை முதல் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடகாவில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குள் மற்றும் மல்டிபிளக்ஸ்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சி நடைபெறும் ஆடிட்டோரியம் போன்ற இடங்களிலும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதுபோன்று, வரும் 26 முதல் உயர்கல்வி நிறுவனங்களைத் திறக்க முடிவு செய்து உள்ளதாகவும், முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இரவு நேரத்துக்கான ஊரடங்கு 9 மணிக்குப் பதில் 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகாவில்  கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு கூடுதல் தளர்வுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடகாவில் இன்று மட்டும் 24 மணி நேரத்தில் 1,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் அம்மாநிலத்தில் கொரோனாவால் 28,83,947 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 36,157 ஆகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,18,476 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

6 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

9 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

9 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

10 hours ago