வீட்டை விட்டு வெளியேற கடத்தி , கற்பழித்ததாக பொய் கூறிய மாணவி.! விசாரணையில் அம்பலம்.!

Published by
Ragi

வீட்டை விட்டு வெளியேறுவதற்காக கல்லூரி மாணவி ஒருவர் தன்னை கடத்தி கற்பழித்ததாக பொய் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகிய ஹைதராபாத்தில் உள்ள மெச்சால் காடிகேசர் எனும் பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே பார்த்தோம்.

மூன்று நாட்கள் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கில் அதிர்ச்சிகரமான தகவலை கமிஷன் தெரிவித்துள்ளார்.அதாவது மாணவி கூறியது அனைத்தும் பொய் என்றும்,குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவள் வீட்டை விட்டு வெளியேற விரும்பியதாகவும்,அதனாலையே தான் தாயை அழைத்து தன்னை கடத்தியதாக கூறியதாகவும்,ஆனால் இதில் போலீஸ் ஈடுபட்டதன் மூலம் சற்று பயந்த மாணவி ஒரு கதையை உருவாக்கி போலீசாரிடம் கூறியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே மாணவி கூறிய விவரங்களின் படி கடத்தியதாக கூறப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் தான் ஆட்டோவில் ஏறி சென்றுள்ளதுடன் ,தன்னை தானே காயப்படுத்தி கொண்டதும் தெரிய வந்தது .மேலும் அவர் கூறிய தகவலில் முரண்பாடுகள் இருந்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் மாணவியிடம் மீண்டும் விசாரணை நடத்தியதில் மாணவி பொய் கூறியதை ஒப்பு கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளார்.மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மன்னிப்பு கோரி விடுவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

28 minutes ago

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

1 hour ago

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

2 hours ago

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

2 hours ago

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

3 hours ago

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

9 hours ago