கால் விரல்களால் தேர்வு எழுதி 12-ம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண் பெற்ற மாணவன்…!

Published by
லீனா

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவன், கால் விரல்களால் தேர்வு எழுதி 12-ம் வகுப்பு தேர்வில் 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலம், லக்னோவில், துஷார் என்ற மாணவனுக்கு, பிறந்ததிலிருந்தே இரண்டு கைகளும் செயல்படவில்லை. இந்நிலையில், துஷார், 12-ம் வகுப்பில், தனது கால் விரல்களால், தேர்வெழுதி 70% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து, துஷார் கூறுகையில், பிறந்ததிலிருந்து என் இரண்டு கைகளும் செயல்படவில்லை, ஆனால் நான் அதை ஒரு குறைபாடாக ஒருபோதும் கருதவில்லை. என் மூத்த சகோதரர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, ​​நான் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று என் பெற்றோரிடம் கேட்டேன், ஆனால் நான் எப்படி எழுதுவது என்பது தடையாக இருந்தது. என் உடன்பிறப்புகள் படிக்கும்போது, நான் என் கால்விரல்களை என் கைகளாக மாற்றி  எழுத ஆரம்பித்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நான் எனது கால்விரல்களால் தேர்வுகளை எழுதும் போது, விடைத்தாள்களை அழகாக காண்பிக்க கருப்பு மற்றும் நீல பேனாக்களை பயன்படுத்தி எழுதினேன் என தெரிவித்துளளார். துஷாருக்கு பொறியியலாளர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. அவரது தந்தை, ராஜேஷ் விஸ்வகர்மா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது மகனின் படிப்புக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்.

தனது தனத்தை குறித்து துஷார் கூறுகையில், எனது தந்தை என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர் கொண்டார். அவர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று எண்ணை சேர்ப்பதற்காக போராடினார். இறுதியில் ஒரு பள்ளியில் சேர்த்தார். நான் எனது இயலாமையை வென்று என் கால் விரல்களால் எழுத ஆரம்பித்தேன்.

 கால் விரல்களால் என் புத்தகங்களில் பக்கங்களையும் என்னால் திருப்ப முடியும். மேலும் தன்னை ஆதரித்த ஆசிரியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர்கள் என்னை தரையில் அமர்ந்து தேர்வுகளை எழுத அனுமதித்தனர். எனது மதிப்பெண்களை குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பத்தாம் வகுப்பில் 67 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன். தற்போது நான் பனிரெண்டாம் வகுப்பு 70 சதவீத மதிப்பெண்களைப் பெற்று உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago