கொரோனா மையமாக மாறும் உச்சநீதிமன்ற வளாகம்..!

Published by
Edison

உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையானது வருகின்ற மே 10 முதல் ஜூன் 27 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைப்பட்ட காலத்தில் உச்சநீதிமன்ற வளாகமானது,கொரோனா மையமாக மாற்றப்படவுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பானது 4 லட்சத்தை எட்டியுள்ளது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.மேலும்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான தடுப்பூசி மருந்துகள்,படுக்கை வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிகாரி ஒருவர் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்,”வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை ஆரம்பமாகிறது.எனினும்,சிறப்பு அமர்வு நீதிபதிகள் கொண்ட விசாரணையானது வழக்கம்போல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும்.

இதனையடுத்து,இதற்கிடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் வளாகங்கள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு படுக்கை வசதிகள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான மையமாக மாற்றிக் கொள்ளப்படும்.இதனால்,இந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறையானது ஒரு வாரத்திற்கு முன்னரே ஆரம்பமாகும் எனவும்,இதற்கு தலைமை நீதிபதி தரப்பிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

5 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

33 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago