Categories: இந்தியா

கொலீஜியம் பரிந்துரைகள்… மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.!

Published by
மணிகண்டன்

மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்க  உச்சநீதிமன்ற 5 மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்வர் .

அந்த கொலிஜியம் அமைப்பின் பரிந்துரையானது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய சட்டத்துறை அதில் குறிப்பிட்ட நீதிபதிகளின் பெயர்களை ஒப்புதல் அளித்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர் பணி நியமனம் செய்யப்படும்.

சத்தீஸ்கர் தேர்தல்: 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு.!

இந்த நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய நீதிபதி அமர்வு அதிருப்தியை தெரிவித்துள்ளது. கொலீஜியம் சில பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. ஆனால அதில் ஒரு சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு, சிலரை அங்கீகரிக்காமல் அப்படியே கிடப்பில் வைத்து விடுகிறார்கள். இது நீதித்துறை மீது இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதை குறைக்கும் வகையில் அமைந்துவிடும் என்றும்,

சில நீதிபதிகளின் பெயர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அதை கொலீஜியம் அனுமதிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அது உங்களுக்கு (மத்திய அரசு) சம்மதமா.? உங்கள் முடிவின்படி, யாரோ ஒருவர் நீதிபதியாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார், நாங்கள் அதனை ஏற்கவில்லை.

ஏற்கனேவே, பஞ்சாப் , ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு கொலிஜியம் 5 நீதிபதிகள் பெயரை பரிந்துரைத்தது. ஆனால் மத்திய அரசு 3 நீதிபதிகள் பெயரை தான் அங்கீகரித்தார்கள் என ஒரு சில உதாரணங்களையும் நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மத்திய அரசிடம் தெரிவிக்கிறோம் என மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கூறினார். இதனை அடுத்து இந்த வழக்கானது நவம்பர் 20ஆம் தேதிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago