Categories: இந்தியா

ஒரே பாலினத்தவர் திருமணம் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக்கோரிய வழக்குகள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், தங்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுவில் ஏற்கனவே உள்ள சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இவ்வகை திருமணங்கள் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணையின்போது இந்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், இது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரும் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில் பத்தி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சட்ட அங்கீகாரம் கோரும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்கக்கூடாது, அவற்றை நிராகரிக்க வேண்டும். ஓரினச் சேர்க்கை குற்றமாகாது என்பதால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோருவது உரிமையாகாது.

திருமணம் என்பது மிகவும் புனிதமானது. இந்து, முஸ்லீம் உட்பட அனைத்து மதங்களும், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் வாழ்க்கையில் இணைவதை தான் திருமணம் என்கின்றன. நம்முடைய பாரம்பரியம், கலாசாரம், பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் ஆகியவையும் அதே முறைதான் என்கின்றனர். இந்த இயற்கை நீதி, நியதிக்கு எதிராக, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை அங்கீகரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தது.

இந்த மனுவை, முக்கிய வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது. அதன்படிபாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்க கோரிய வழக்குகள், கடந்த மே 11ம் தேதி தலைமை நீதிபத்தில் உட்பட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

15 minutes ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

2 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

4 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

4 hours ago