கேரளாவில் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது மாணவர்களை கேமராவை ஆன் செய்யச் சொல்லி, அவர்கள் ஒவ்வொருவரையும் கடைசியாக ஒரு முறை பார்த்தார்.
கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு நலன்புரி கீழ்நிலைப் பள்ளியில் 47 வயதான மாதவி என்ற 3 ஆம் வகுப்பு கணித ஆசிரியை உள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமை தனது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென அசௌகரியம் ஏற்பட்டடு இருமல் தொடங்கியது. இதனால், மாதவி மாணவிக்கு எடுத்து வந்த ஆன்லைன் வகுப்பை கட் செய்து கணவர் மறைவுக்குப் பிறகு தனியாக இருந்த மாதவி தனது உறவினருக்கு போன் செய்துள்ளார்.
உறவினர் மாதவியின் வீட்டிற்கு வந்த போது, மயங்கிய நிலையில் இருந்த அவரைக் கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திடீர் மரணம் குறித்து மேலும் அறிய, பள்ளி நிர்வாகம் அவரது கடைசி வகுப்பின் காட்சிகளை பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதில், தனது மாணவர்களை கடைசியாக ஒரு முறை பார்க்க கேமராவை ஆன் செய்யச் சொல்லும் போது மாதவிக்கு நெஞ்சு வலி வருவதை வீடியோ காட்டுகிறது. பிறகு அவருக்கு அதிக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாதவி இறந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மாதவியை பள்ளியில் அன்பான ஆசிரியையாக நினைவு கூர்ந்தனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…