Tractor overturns [Image Source : Twitter/inshorts]
ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து கால்வாயில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று கவிழ்ந்து கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். குடும்ப விழா ஒன்றில் பங்கேற்பதற்காக வட்டிசெருகூர் கிராமத்தில் இருந்து 40 பேர் கொண்ட குழு டிராக்டரில் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கே.ஆரிப் ஹபீஸ் கூறுகையில், 40 பேரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து பாசன வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது என்றும் அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நான்கு பேர் குண்டூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறினார்.
மேலும், இறந்தவர்கள் மிக்கிலி நாகம்மா, மாமிடி ஜான்சி ராணி, கட்டா நிர்மலா, கரிகாபுடி மாரியம்மா, கரிகாபுடி ரத்னகுமாரி, கரிகாபுடி சுஹாசினி மற்றும் சலோமி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குண்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…