பெற்றோருக்கு கொரோனா -15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி…!

Published by
Edison
  • பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது பரவி வரும் நிலையில்,அரசு ஊழியர்களுக்கு பல்வேறு  நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில்,மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்,அந்த ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து,அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  • மத்திய அரசின் ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,வீட்டில் தனிமையில் இருந்தால் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால்,அவருக்கு 20 நாட்கள் வரை,பயண விடுப்பு, எஸ்சிஎல் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பு (EL) வழங்கப்படும்.
  • ஊழியருக்கு தொற்று உறுதியாகி 20 நாளுக்கு பிறகும் குணமடையாமல் மருத்துவமனையில் இருந்தால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த பின்னர் அவருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும்.
  • ஊழியரின் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்,அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் வரை அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான எஸ்சிஎல்-ஐத் தாண்டி  விடுமுறை அனுமதிக்கப்படும்.
  • இந்த உத்தரவானது கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Edison

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

52 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

3 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago