பெற்றோருக்கு கொரோனா -15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி…!

Published by
Edison
  • பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் 15 நாள் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது பரவி வரும் நிலையில்,அரசு ஊழியர்களுக்கு பல்வேறு  நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில்,மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்,அந்த ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து,அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  • மத்திய அரசின் ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,வீட்டில் தனிமையில் இருந்தால் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தால்,அவருக்கு 20 நாட்கள் வரை,பயண விடுப்பு, எஸ்சிஎல் அல்லது ஊதியத்துடன் கூடிய விடுப்பு (EL) வழங்கப்படும்.
  • ஊழியருக்கு தொற்று உறுதியாகி 20 நாளுக்கு பிறகும் குணமடையாமல் மருத்துவமனையில் இருந்தால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த பின்னர் அவருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும்.
  • ஊழியரின் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால்,அவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளிவரும் வரை அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான எஸ்சிஎல்-ஐத் தாண்டி  விடுமுறை அனுமதிக்கப்படும்.
  • இந்த உத்தரவானது கடந்த ஆண்டு மாா்ச் 25-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Edison

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

41 minutes ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

1 hour ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

2 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

4 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

5 hours ago