உத்தரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பென் வசித்து வந்த கிராமம் சீல்வைக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்.,முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,பிரியங்க ஆகியோர் போலீசாரால் தடுத்தி நிறுத்தப்பட்டனர்.
தடுப்பை மீறி ராகுல் செல்ல முயன்ற போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் ராகுலை புதரில் போலீசார் தள்ளி தாக்கியதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி செல்ல முயன்றதாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
தடையை மீறியதாக ராகுல் காந்தி,பிரியங்கா உள்ளிட்ட 200 பேர் மீது போலீசார் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு இருக்க அக்கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டு 144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அதில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…