கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி!

Published by
Rebekal

ஒன்றாக மது அருந்திவிட்டு, கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி மற்றும் காதலன் கைது.

கொல்கத்தாவின் வடக்கிலுள்ள பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணான ஸ்வப்னா என்பவர் அவரது காதலன் சுஜித் தாஸ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூங்கில் தண்டின் கீழ் இரத்தக்கறை காணப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இழுபட்டு சென்றது போன்று அடையாளம் இருப்பதால் அதை நோக்கி சென்றுள்ளனர். ஆனால், அடையாளம் தெரியவில்லை எனவே சந்தேகத்திற்கிடமான ஏதேனும் தென்பட்டால் தெரிவிக்குமாறு கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஒரு பூட்டப்பட்ட வீட்டின் முன்பதாக இரத்த கறைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த வீட்டை உடைத்து பார்த்தபோது படுக்கையின் கீழ் மணல் குவிக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பின் அங்கு சோதனை மேற்கொண்ட போது அங்கு ஒரு சடலம் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது அதில் பல குத்துக் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த பொழுது 42 வயதான ராமகிருஷ்ணா சர்கர் என்பவர்தான் இந்த உயிரிழந்த சடலம் என கிராமவாசிகள் அடையாளம் கண்டு கூறியுள்ளனர்.
விசாரணையில் ராம் கிருஷ்ணாவின் மனைவிக்கு சுஜித் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததால் சம்பவத்தன்று ராமகிருஷ்ணா ஸ்வப்னா சுஜித் ஆகிய மூன்று பேருமே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்பு கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவரை  ஸ்வப்னா கொலைசெய்து கட்டிலுக்கு அடியில் புதைத்தது தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலன் சுஜித் மற்றும் ஸ்வப்னாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

12 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

13 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

13 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

14 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

15 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

15 hours ago