கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி!

Published by
Rebekal

ஒன்றாக மது அருந்திவிட்டு, கள்ளக்காதலனுடன் கணவனை கொன்று கட்டிலுக்கடியில் புதைத்த மனைவி மற்றும் காதலன் கைது.

கொல்கத்தாவின் வடக்கிலுள்ள பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயதுடைய பெண்ணான ஸ்வப்னா என்பவர் அவரது காதலன் சுஜித் தாஸ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூங்கில் தண்டின் கீழ் இரத்தக்கறை காணப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இழுபட்டு சென்றது போன்று அடையாளம் இருப்பதால் அதை நோக்கி சென்றுள்ளனர். ஆனால், அடையாளம் தெரியவில்லை எனவே சந்தேகத்திற்கிடமான ஏதேனும் தென்பட்டால் தெரிவிக்குமாறு கூறிவிட்டு போலீசார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஒரு பூட்டப்பட்ட வீட்டின் முன்பதாக இரத்த கறைகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த வீட்டை உடைத்து பார்த்தபோது படுக்கையின் கீழ் மணல் குவிக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பின் அங்கு சோதனை மேற்கொண்ட போது அங்கு ஒரு சடலம் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது அதில் பல குத்துக் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த பொழுது 42 வயதான ராமகிருஷ்ணா சர்கர் என்பவர்தான் இந்த உயிரிழந்த சடலம் என கிராமவாசிகள் அடையாளம் கண்டு கூறியுள்ளனர்.
விசாரணையில் ராம் கிருஷ்ணாவின் மனைவிக்கு சுஜித் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததால் சம்பவத்தன்று ராமகிருஷ்ணா ஸ்வப்னா சுஜித் ஆகிய மூன்று பேருமே ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்பு கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவரை  ஸ்வப்னா கொலைசெய்து கட்டிலுக்கு அடியில் புதைத்தது தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலன் சுஜித் மற்றும் ஸ்வப்னாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

4 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

5 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

6 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

7 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

8 hours ago