கணவரின் அதீத அன்பால் மூச்சு திணறி விவகாரத்து கேட்ட மனைவி.!

Published by
Ragi

கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை தனக்கு காட்டுவதாக கூறி மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பத் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்துவதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி ஷரியா நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனக்கு திருமணமாகி 18 மாதங்களாகியதாகவும், ஆனால் தனது கணவர் என்னிடம் ஒரு நாள் சண்டை போட்டதில்லை என்றும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் தனக்கு சமையல், வீட்டு வேலைகள் உள்ளிட்ட அனைத்திலும் உதவுகிறார், அளவுக்கு அதிகமான அன்பை காட்டுகிறார். அது தனக்கு பொறுத்து கொள்ள முடியவில்லை என்றும், தான் தவறு செய்தால் கூட தன்னை அவர் மன்னிப்பதாகவும், இந்த அன்பால் தான் மூச்சு திணறி வருவதாகவும், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு ஒத்து போகும் நபர் தனக்கு வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

பெண்ணின் காரணத்தை கேட்ட நீதிபதி விவகாரத்திற்கான பெண்ணின் காரணம் அற்பமாக உள்ளதாக கூறி நிராகரித்து விட்டார். மேலும் உள்ளூர் பஞ்சாயத்திடம் இந்த மனு கொண்டு செல்லப்பட்டு நிராகரித்துள்ளனர். இதுகுறித்து பெண்ணின் கணவர் கூறுகையில், அவள் ஒரு தவறும் செய்ததாக தான் நினைக்கவில்லை, எப்போதும் தான் சரியான கணவராக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன் என்றும், தனது மனைவியின் மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு கணவரும் ஷரியா நீதிமன்றத்திடம் கேட்க, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

15 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

57 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

1 hour ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

12 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago