தனது கிராமத்தை மேம்படுத்த பல லட்சம் ரூபாய் சம்பளத்தை உதறி தள்ளிய பெண்!

Published by
Rebekal

தனது சொந்த கிராமத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவில் பல லட்சம்  ரூபாய் சம்பளத்தில் பார்த்து வந்த இன்ஜினியர் வேலையை உதறி தள்ளிவிட்டு, பஞ்சாயத்து தலைவர் போட்டியில் நின்று ஜெயித்துக்காட்டிய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே என்னும் மாவட்டத்தில் உள்ள ஜகலூர் எனும் தாலுகாவை சேர்ந்த சோக்கி எனும் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்மணி சுவாதி என்பவர் பி.இ தொழில்நுட்பம் பயின்று அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். ஐந்து ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றி விட்டு தற்பொழுது அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுவாதி நாடு திரும்பியுள்ளார். இதற்கு காரணம் தான் தனது சொந்த கிராமத்தை சீர்ப்படுத்த வேண்டும் என்பது தானாம்.

பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்த சுவாதி அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு தனது கிராம மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர் பஞ்சாயத்து தலைவராக தற்பொழுது தேர்வாகி இருக்கும் நிலையில் சொந்த கிராமத்தில் வளர்ச்சிக்காக லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு வந்த சுவாதியின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

10 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

10 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

12 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

13 hours ago