வேலை தேடி அண்ணனுடன் சென்ற பெண்ணை நண்பர்களுடன் பலாத்காரம் செய்த தம்பி.
அசாம் மாநிலம் உடுமலைப் பேட்டையில் உள்ள பாக்கு மட்டை தொழிற்சாலையில் தனது கணவருடன் 22 வயதுடைய பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த ராஜேஷ் என்பவரிடம் தனக்கு வேறு ஏதேனும் வேலை வாங்கித் தருமாறு அப்பெண் கேட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணை வரவழைத்து ராஜேஷ் பல நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி அப்பெண்ணுக்கு வேலை கேட்டு அடைந்துள்ளார். பின்பு சிறிது நேரம் ராஜேஷ் வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார். அனைவரிடமும் இயல்பாக அப்பெண் பேசி சிரித்து உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு செல்ல வேண்டும் தன்னை பேருந்து நிலையம் வரை கொண்டு சென்று விடுமாறு ராஜேஷிடம் அப்பெண் கேட்டதற்கு, ராஜேஷ் வெளியில் செல்ல வேண்டும் என்பதால் தனது தம்பியை அப்பெண்ணை கொன்டு விடுமாறு இருசக்கர வாகனத்தில் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ராஜேஷின் தம்பி அந்த பெண் மீது ஆசை கொண்டு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று தனது நண்பர்கள் நான்கு பேரையும் வரவழைத்து ஐந்து பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு சென்று அந்தப் பெண் தன் கணவரிடம் நடந்ததை கூற, இருவரும் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை விசாரித்த காவலர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராஜேஷின் தம்பி மற்றும் அவரது நண்பர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 376 D, 384, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…