வேலை தேடி அண்ணனுடன் சென்ற பெண்ணை நண்பர்களுடன் பலாத்காரம் செய்த தம்பி.
அசாம் மாநிலம் உடுமலைப் பேட்டையில் உள்ள பாக்கு மட்டை தொழிற்சாலையில் தனது கணவருடன் 22 வயதுடைய பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த ராஜேஷ் என்பவரிடம் தனக்கு வேறு ஏதேனும் வேலை வாங்கித் தருமாறு அப்பெண் கேட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணை வரவழைத்து ராஜேஷ் பல நிறுவனங்களுக்கு ஏறி இறங்கி அப்பெண்ணுக்கு வேலை கேட்டு அடைந்துள்ளார். பின்பு சிறிது நேரம் ராஜேஷ் வீட்டிற்கு சென்று தங்கி இருந்துள்ளார். அனைவரிடமும் இயல்பாக அப்பெண் பேசி சிரித்து உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு செல்ல வேண்டும் தன்னை பேருந்து நிலையம் வரை கொண்டு சென்று விடுமாறு ராஜேஷிடம் அப்பெண் கேட்டதற்கு, ராஜேஷ் வெளியில் செல்ல வேண்டும் என்பதால் தனது தம்பியை அப்பெண்ணை கொன்டு விடுமாறு இருசக்கர வாகனத்தில் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ராஜேஷின் தம்பி அந்த பெண் மீது ஆசை கொண்டு பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று தனது நண்பர்கள் நான்கு பேரையும் வரவழைத்து ஐந்து பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு சென்று அந்தப் பெண் தன் கணவரிடம் நடந்ததை கூற, இருவரும் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை விசாரித்த காவலர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராஜேஷின் தம்பி மற்றும் அவரது நண்பர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147, 376 D, 384, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…