ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்த இளைஞன் – டாஸ் போட்டு பார்த்து ஒரு காதலியுடன் திருமணம்!

Published by
Rebekal

கர்நாடகாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்ததால், டாஸ் போட்டு பார்த்து ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியின் 27 வயதுடைய மகன் பக்கத்து கிராமத்தில் உள்ள 20 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதேபோல கடந்த 6 மாதத்திற்கு முன்பு இளைஞன் வேறு ஒரு கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் அறிமுகமாகி அவரையும் காதலித்து வந்துள்ளார். ஒரே நேரத்தில் இரு பெண்களுடன் இவர் உறவில் இருந்து வந்துள்ளார். ஆனால் இந்த இரண்டு காதலிகளுக்குமே இந்த உண்மை தெரியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் இந்த இளைஞனின் காதலுக்கு அவரது குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்காமல், வேறு ஒரு பெண்ணை திருமணம் நிச்சயிக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அந்நேரத்தில் இந்த இளைஞனை காதலித்த இரு பெண்களும் அவர்களது வீட்டில் கூறி, நேராக அந்தப் இளைஞனின் வீட்டிற்கே சென்று பேசி உள்ளனர். அப்பொழுது தான் இந்த இளைஞன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் பழக்கத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் அந்த கிராமம் முழுவதும் பரவியதை தொடர்ந்து, ஊர் பஞ்சாயத்து கூட்டப்பட்டு இதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி இந்த பஞ்சாயத்தில் அந்த பையன் யாரை திருமணம் செய்ய விரும்புகிறார் என கேட்டதற்கு அவன் பதிலே கூறவில்லையாம். ஆனால் பெண்கள் இருவரும் அந்த பையன் தான் வேண்டும் என ஒரே முடிவாக இருந்துள்ளனர். எனவே இறுதியாக இந்தப் பெண்கள் இருவரையும் வைத்து டாஸ் போட்டு இந்த பிரச்சனையை கிராம பஞ்சாயத்து முடித்து வைத்துள்ளது.

அதன்படி டாஸில் வெற்றி பெற்ற பெண்ணை பையன் அனைவர் முன்பும் கட்டியணைக்க, மற்றொரு பெண் அனைவர் முன்பும் அவர்களை அறைந்து விட்டு உங்கள் முன்பு நான் நன்றாக வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு சென்றுள்ளார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது அதிக அளவில் மக்களால் பேசப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

52 minutes ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

1 hour ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 hours ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

3 hours ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

3 hours ago