இந்தியாவில் குடும்ப பக்தி, தேச பக்தி என இரண்டு வகையான அரசியல் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று பாஜக கட்சியின் நிறுவப்பட்டு நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது டெல்லியில் உள்ள தலைமை அலுவலகம் முன்பதாக உள்ள பாஜக கட்சி கொடியை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் ஏற்றி வைத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு பாஜக எம்பிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து பிரதமர் காணொலி மூலமாக மக்களுடன் உரையாற்றி உள்ளார். அப்போது அவர் பேசுகையில், ‘குடும்ப அரசியல் செய்யக்கூடிய கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக மட்டுமே இதற்கு மாற்றாக செயல்படுகிறது. இந்தியாவில் குடும்ப பக்தி, தேச பக்தி என இரண்டு வகையான அரசியல் உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…