பங்காளி நாடான பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக, பாகிஸ்தான் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை’ என, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், காஷ்மீர் உட்பட, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ‘அமைதி பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாக இந்தியா செய்தி அனுப்பியுள்ளது’ என, குறிப்பிட்டார்.
இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது, பாகிஸ்தான் அதிகாரி கூறியுள்ளதுபோல், அமைதி பேச்சு நடந்த, இந்தியா எந்த அழைப்பும் விடுக்க வில்லை; அவர் கூறியதில் எந்த உண்மையும் இல்லை. நம் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக அவர் பேசியுள்ளதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள அரசு, உள்நாட்டு பிரச்னைகளால் திண்டாடுகிறது. அதை மறைக்கவும், சர்வதேச நாடுகளை திசை திருப்பவும், இதுபோன்ற பொய்களை கூறுவது வாடிக்கை என்று அவர் கூறினார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…